manu needhi cholan

Thiruvarur Thiyagarajar Temple & Social Justice the Great King Manu Needhi Cholan Relatable History.

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் – சமூக நீதியின் அடையாளம் மாமன்னன் மனுநீதி சோழன் வரலாற்று தொடர்பு

பகுதி -5

சமூக நீதியின் அடையாளம் மாமன்னன் மனுநீதி சோழன்

Thiruvarur Thiyagarajar Temple –சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் மனுநீதி சோழன் உருவச்சிலை உயர்ந்து கம்பீரமாய் இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அவர் வாழ்ந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் அவர் புகழ் இன்றும் தமிழர்களால் போற்றப்படுகின்றது என்றால் அவரது செங்கோல் ஆட்சியை பற்றி ஒரு தமிழனாய் நாம் அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய ஒன்றாகும்.

 இந்த பதிவின் மூலம் மனு நீதி சோழனின் அரசாட்சியும் மற்றும் பதிவின் இறுதியில் இந்த மன்னருக்கும் எம்பெருமான் ஈசன் அருளும் ஆலயம் திருவாரூர் தியாகராஜர்  திருக்கோவிலுக்கும் உள்ள தொடர்பும் என்ன  என்பதை பார்ப்போம்.

வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். அனைவரும் நலமோடும் ஒற்றுமையோடும் வாழ இறைவனிடம் வணங்குகிறேன். இன்றைய தலைப்பு திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் – சமூக நீதியின் அடையாளம் மாமன்னன் மனுநீதி சோழன் வரலாற்று தொடர்பு  ஆகும்.

மனுநீதி சோழனின் வரலாறு

Social Justice the Great King Manu Needhi Cholan History

மனுநீதி சோழ மன்னன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார். அதாவுது கிருத்து பிறப்பிற்கு முன்பு பிறந்தவர்.  தமிழ்நாட்டின் திருவாரூரை தலைநகரமாக கொண்டு செங்கோல் ஆட்சி புரிந்தவர்.

இவர் பழங்கால சோழ மன்னர்களிலேயே முற்கால சோழர் என தமிழக வரலாற்று பதிவேட்டில் பெருமை கொள்ளும் மன்னர் ஆவார். தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டின ராஜேந்திர சோழன் வம்சத்திற்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்கு முந்திய காலத்தில் ஆட்சி புரிந்த மாமன்னன் இவர். இவரின் இயற்பெயர் எல்லாளன் ஆகும்.

இலங்கையின் அனுராதபுர ராஜ்ஜியத்தை தனது படை பலத்தினால் வீழ்த்தி தனது சோழ ராஜ்ஜியத்தை நிலை நாட்டி சுமார் நாற்பத்தி நான்கு ஆண்டுகள் செங்கோல் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னர் ஆவார் மனுநீதி சோழன்.

இவற்றை கூறும் வகையில் ,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தமிழர் இலங்கையின் பெருமையை சொல்லும் மஹாவம்சம் என்னும் நூலில் மாமன்னன் மனு நீதி சோழனின் வாழ்க்கை வரலாறும் , அவரது செங்கோல் ஆட்சியின் திறமை மற்றும் ராஜ்யத்தின் படைபலம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

நம் பைந்தமிழ் மாலையான சிலப்பதிகாரத்தில் “அரும் பெற்ற புதல்வனை  ஆழியன் மாடித்தோன்” என்றும், “மகனை முறை செய்த மன்னவன்” என்றும்  மணிமேகலையில் மன்னரின் பெருமைக்கு சான்றாக  குறிப்பிடபட்டுள்ளன.

சோழச்சக்ரவர்தியின் நீதி மணி ஓசை

Manu Needhi Chola Emperor Justice Bell

தன் நாட்டு மக்கள் தன் அரசவையை யார் உதவியும் இன்றி தன்னை விரைவாக காணவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு எந்த நேரத்திலும்  நீதி கிடைக்கும் விதமாகவும், தனது அரசவை முன்பு மிக பெரும் ஆராய்ச்சி மணி ஒன்றை சோழ மன்னன் நிறுவி இருந்தார்.

அந்த மணியின் கயிறு மிகவும் பெரியதாகவும் மற்றும் அதனின் நுனி மிகவும் நீண்டதாக அரசரின் படுக்கை அறையில் இருக்கும் கட்டிலின் காலில் அது கட்டப்பட்டிருக்கும் என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நீதி கேட்டு வரும் வேளையில் மன்னர் உறக்கத்தில் இருந்து எழுவதற்காக  கட்டிலின் கால்களில் அந்த மணியின் கயறு கட்டப்பட்டிருந்தன என கூறப்படுகின்றது. 

தனது நாட்டு மக்களின் நலனை காக்க மன்னன் எந்நேரமும் தயங்கியது இல்லை. இதற்கு சான்றாக  செங்கோல் கொண்டு நீதியினை நிலை நாட்டவும் செய்தார். நீதிக்காக இத்தனை முக்கியத்துவம் தந்த மனு நீதி சோழனுக்கு அவரது வாழ்வில் பெரும் சோதனை காலம் ஒன்று காத்திருந்தன.

சமூக நீதியின் அடையாளம் மாமன்னன் மனுநீதி சோழன்

மன்னனின் அருந்தவம் புதல்வன் வீதிவிடங்கன் தனது சிறு வயதினிலேயே அனைத்து கலைகளிலும் தேர்ந்த தலை சிறந்த வீரன் ஆவான். அப்படி ஒரு சமயத்தில் வீதிவிடங்கன் வீதியில் தேரோட்டத்தை மிக வேகமாக  செலுத்தி மக்கள் முன்பு தனது திறமை வெளிப்படுத்தி  கொண்டிருந்தான்.

எனவே , அதை கண்ட அவன் நண்பர்கள் மற்றும் மக்களும் ரசித்து உற்சாகப்படுத்தினர்.  அந்நேரத்தில் சற்றும் எதிர் பாராமல் பசுவின் கன்று ஒன்று தேரோட்டத்தின் குறுக்கே வர , வீதிவிடங்கனோ தேரை நிறுத்துவதற்கு முன் பசு  தேரின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரை விட்டது.

இதனை கண்ட தாய்ப்பசு , மற்றும் இளவரசன் வீதிவிடங்கனும் தான் அறியாமல் செய்த தவறினால் உயிர் ஒன்று போனதை  நினைத்து வேதனையில் வாடி அழுது இருவரும் கண்ணீர் விட்டனர். இப்படியே இரவு ஆக, தன் கன்றினையும், இளவரசனையும் விட்டு அங்கிருந்து தாய் பசு அரண்மனை நோக்கி சென்றது.

நீதி கேட்டு பசு ஆராய்ச்சி மணி அடித்தது. நடு சாமத்தில் மணியின் ஓசையினை கேட்டு வந்த பசுவினை பார்த்து மன்னர் குழம்பினார். பின் பசுவை பின்தொடர்ந்த பொழுது இறந்த கன்றின் அருகே தன் மகன் அழுது கொண்டிருந்ததை கண்டு மன்னன் குழம்பினார். நடந்தது அனைத்தும் தன் மகன் மூலம் கேட்டு அறிந்தார்.

வேதனையுற்ற மன்னன் ,மறுநாள் காலையில் அரசவையை கூட்டி குற்றத்தை ஒப்புக்கொண்ட மகனுக்கு தண்டனை அளிக்க எண்ணினார்.

நீதி எல்லா உயிர்களுக்கும் பொது என்பதை உணர்த்த மனுநீதிச்சோழ மன்னன், அறியாமல் தவறு செய்த தன் ஒரே மகனை தேர் சக்கரத்தில் இட்டு மரண தண்டனை கொடுக்க உத்தரவிட்டான். ஆனால் அந்தத் தண்ட னையை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை.

 அதனால் நீதியை நிலை நாட்ட , பசுவின் கன்றை கொன்ற குற்றத்திற்காக மகன் வீதிவிடங்கனை  சோழ மன்னனே, தன்னுடைய தேரின் காலில் மகனை படுக்கவைத்து அவனை கொன்றான்.

பசுவிற்கு நீதி வழங்கி பசு அனுபவித்த துயரத்தை தானும் அனுபவித்தார்.இதன் காரணமாக எல்லாளன் என்னும் பெயர் கொண்ட மன்னன் பின்னாளில் மனுநீதி சோழன் என்றும் பெயர் பெற்றார்.

திருவாரூர் தியாகராஜர்  திருக்கோவில்

THIRUVARUR THIYAGARAJAR TEMPLE DETAIL

திருவாரூர் தியாகேஸ்வரர் கோவில் தல புராண வரலாற்றில்  மனுநீதி சோழரின் பெருமையை பற்றி ஒரு முறை நாரத மகரிஷி எமதர்மரிடம் தேவலோகத்தின் நீதிமான் எமதர்மன் என்றால் பூலோகத்தின் நீதிமான் மனுநீதி சோழன் ஆவார் என்று புகழ்ந்து கூறினார்.

அவற்றை சோதித்து பார்க்க எமதர்மனே தாய் பசுவாகவும், உடன் கன்றோடும் வந்து மன்னனை சோதிக்க வந்தார் எனவும்,. இறுதியில் அவர் தீர்ப்பை பார்த்து எமதர்மன் “மூன்றுலோகத்திலும் சிறந்த நீதிமான் தாங்களே” ,என கூறி  பாராட்டி விடை பெற்றார் என்றும் புராணத்தில் கூறப்படுகின்றது.

இந்த நிகழ்வை அனைத்தும்  குறிக்கும் வகையில் கல்சிலையாக பசு,கன்று,தேர் சக்கரம் கொண்டு  இக்கோவிலில் கட்டப்பட்டுள்ளது.

 இறுதியில் மகனை இழந்த மன்னனின் வேதனையை போக்கும் விதமாக  தந்தை, தாய், சேய் என மூவுரு கொண்ட எம்பெருமான் தியாகேசன், மன்னனுக்கு திருக்காட்சி கொடுத்து இளவரசன், கன்று என இருவரையும் உயிர்ப்பித்து அருளினார். இந்த தியாகேசர் அருளும் ஆலயம் திருவாரூர் தியாகேசர் ( தியாகராஜர்)  திருக்கோவிலாகும்.

திருவாரூர் தியாகராஜர்  கோவில் சுருக்கமான விவரம் (Thiruvarur Thiyagarajar Temple & Social Justice the Great King Manu Needhi Cholan Relatable History.Thiyageswarar Temple History)

தியகேஷ்வரர் கோவில் என்பது இந்தியாவின் ஏழு முக்தி தரும் சிவத்தலத்தில் தியாகேஸ்வரர் ஆலயமும்  ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பழமையான சிவன் கோவில் சிறப்புடையது மற்றும்  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற நாயன்மார்கள் பாடல் புகழ்ந்த தலம் ஆகும்.

எம்பெருமான் தியாகராஜராக பஞ்ச சபைத் தலங்களில் (சிவபெருமான் நடனம் புரிந்த 5 இடங்கள்) இக்கோவில் மிகவும் முக்கியமானது. இங்கு “பூத விநாடன தாண்டவம்” எனப்படும் நடனம் புகழ்பெற்றது.

இக்கோவிலுக்கு திருவாரூர் தியாகராஜர் கோவில் என்ற மற்றோரு பெயரும் உண்டு. ம் தமிழ்நாட்டின் காவிரி தென்கரை ஓரம் பகுதியில்  சிறப்பாக அமைந்துள்ளது.

இக்கோவில் மூலவராக தியகேஷ்வரர் (திருவாரூர்த்தியகேஷ்வரர்) சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அம்பாளாக நீலோத்பல நாயகி உள்ளார். கோவில் தல விருட்சமாக அகிலமரம் உள்ளது.

இக்கோவில் பரப்பளவு சுமார் 30 ஏக்கர் கொண்ட மிக பெரிய கோவிலாகவும், கோவில் தீர்த்த குளம் சுமார் (பதினேழு) 17 ஏக்கர் கொண்டு மிக பெரிய குளமாக, கமலாலய தீர்த்த குளமாகவும்  விளங்குகின்றது.  

9 கோபுரங்கள், 7 பிரதான வளையமண்டபங்கள்,  80 மூர்த்தி ஸன்னிதிகள், 365 நாட்கள் கொண்ட வருடங்களை குறிக்கும் வகையில் 365 சிவலிங்கம் ஒரே இடத்தில் இடம்பெற்றிருக்கும் பெரிய கோவில் வளாகம் ஆகும்.

உலகிலேயே மிகப்பெரிய கோவில் ரதம் (தேர்) கொண்ட திருவாரூர் தியாகேஸ்வரர் கோவிலில் , மிகவும் பிரசித்தி பெற்ற தேர் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலுக்கு மேலும் சிறப்பினை சேர்க்கும் விதமாக சுமார் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் திருப்பணிகள் செய்யப் பெற்றுள்ளன. தேவார பாடல்களிலேயே மிக அதிகமாக பாடல் பெற்ற

சிவத்தலம் திருவாரூர் தியாகேஸ்வரர் ஆலயம் ஆகும். சிவனடியார்கள் திருநாவுக்கரசர் 208 பாடல்களையும் , சுந்தரர் 87 பாடல்களையும், திருஞானசம்பந்தர் 55 பாடல்களையும் பாடியுள்ளனர்.

ஜாதகத்தில் ஆயுள் கண்டம் உள்ளவர்கள் தியாகேஸ்வரரை தரிசித்து வந்தால் எமபயம் நீங்கி எமதர்மரின் கருணை கிட்டும்.

இத்தனை அற்புதமும் , சிறப்பும் நிறைந்த சிவத்தளத்தினை கட்டாயம் சிவபக்தர்கள் அனைவரும் வாழ்வில் ஒருநாளாவுது தரிசிக்க வேண்டிய தேவார திருத்தலம் திருவாரூர் தியாகேஸ்வரர்(தியாகராஜர்) ஆலயம் ஆகும்.

நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம் 

சந்திக்கின்றோம்.

தகவலை உடனுக்குடன் பெற  astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

To share with your friends please follow the links…

Rating: 5 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply