AVINASHIYAPPAR TEMPLE-எமன் வாயில் சென்றவர்களை கூட எளிதாக மீட்டு தரும் அவிநாசியப்பர் ஆலயம்

ema dharmar

AVINASHIYAPPAR TEMPLE-எமன் வாயில் சென்றவர்களை கூட எளிதாக மீட்டு தரும் அவிநாசியப்பர் ஆலயம்

LIFE RESCUE GOD AVINASHIYAPPAR (Shivan) TEMPLE VALUES

Good health and happy life avinashiyappar temple

AVINASHIYAPPAR TEMPLE-வாழ்கை ஓடுகின்ற ஓட்டத்தில் நாமும் காலில் சக்கரதை கட்டிகொண்டு பணம் சம்பாதிக்க நிக்காமல் ஓடுகின்றோம். பணத்தை நோக்கி ஓடும் நம் வாழ்க்கையில், நமது நாட்டம் முழுவதும் பொன்னும் , பொருளும் சேர்ப்பதிலேயே இருக்கின்றன தவிர நமது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை என்பது சிறிதும் இல்லை.

உடல் ஆரோக்கியம் என்பது கெட்டு போனால் எவ்வளவு பணம் நம்மிடம் இருந்தாலும் அவை அத்தனையும் மதிப்பற்றதாக நம் வாழ்க்கைக்கு அர்த்தமாகிவிடுகின்றன. எனவே அனைவரும் உடல் நலத்தில் கட்டாயம் அக்கறை செலுத்துங்கள் .

அந்த வகையில் சில சமயம் சிறு வயதிலேயே சிலருக்கு ஆயுள் கண்டம் எற்படும். இதனால் விபத்து,விசக்கடி,மிருகங்களினால் ஆபத்து போன்றவை எற்பட்டு காலனிடம் உயிரை விட நேரிடலாம்.

இது போன்ற ஆயுள் கண்டங்களில் இருந்து விடுபட நம் முன்னொர்கள் சில ஆன்மிக  வழிகளை நமக்கு உதவும் விதமாக கூறுகின்றனர். அதாவுது  கோவில் வழிபாடு , தேவ யாகம் நடத்துவது, தீட்சையிடுவது போன்றவை   ஆகும் .

இதில் கோவில் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த எளிய பரிகார முறை ஆகும். மேலும் கோவில் வழிபாடு என்பது ஏழை பாமர மக்களும் எளிதாக செய்ய கூடிய ஒன்றாகவும் திகழ்கின்றன.

அந்த வகையில் ஆயுள் கண்டத்தில் இருந்து விடுபட வைக்கும் சிறந்த ஆறு திருத்தலங்கள் நம் தாய் திருநாடான தமிழநாட்டிலேயே  மிகவும் சிறப்பு பெற்ற ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ளன .

அக்கோவில்கள் எவை , எங்குள்ளன மற்றும் அதன் சிறப்புகள் பற்றி  நான்கு பதிவாக கொடுக்கின்றோம். இதில் ஏற்கனவே 3  பதிவினை கொடுத்துள்ளோம். அக்கோவில்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் கூட இருக்கலாம். வேண்டியவர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான லிங்க் இங்கே உள்ளது  .இன்று சொல்லப்படும் பதிவானது 4 ம் பதிவு ஆகும்.

வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்றைய தலைப்பு ஆயுள் கண்டத்தில் இருந்து மீட்டு தரும் திருத்தலங்களில் தொடர்ச்சியாக

எமன் வாயில் சென்றவர்களை கூட எளிதாக மீட்டு தரும் அவிநாசியப்பர் ஆலயம் ஆகும்.

அவிநாசியப்பர் ஆலயம் தல வரலாறு

AVINASHIYAPPAR TEMPLE HISTORY

அவிநாசியப்பர் கோயில், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ளது . இக்கோவில்  சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே , அவிநாசியப்பர்  ஆலயமானது தமிழ்நாட்டின் பொக்கிஷமாகவும் புகழ்பெற்ற சிவாலயமாகவும் அனைவராலையும் கருதப்படுகின்றன.

இக்கோவிலின் மூலவராக அவிநாசி ஈஸ்வரர் உள்ளார். மூலவருக்கு  அவிநாசியப்பர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இங்கு தாயாராக அம்பாள் கருணாம்பிகை உள்ளார். மேலும் அம்பாளுக்கு   பெருங்கருணை நாயகி என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகின்றாள்.

இத்திருத்தலத்தின் முக்கிய திருவிழாக்களில் வருடந்தோறும் வரும் சித்திரை மாதத்தில் நடைபெறும் அவிநாசியப்பர் பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடக்கும் என்பது குறிப்பிடதக்கது ஆகும். இவ்விழாவில், சிவனடியார்களான 63 நாயன்மார்களுக்கும் இறைவனின் ரிஷப வாகனத்தில் தரிசனம் அளிப்பது மேலும்  ஆலயத்தின் சிறப்புடையதாகும்.

அவிநாசியப்பர் ஆலயம் தல விருட்சம்

AVINASHIYAPPAR TEMPLE PATHIRI TREE

 அவிநாசியப்பர் கோவிலின் தல விருட்சம் என்பது பாதிரிமரம் ஆகும். இத்தல விருச்சத்தின் சிறப்பே இது கோவில் பிரமோற்சவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடைய அதிசய விருட்சம் ஆகும்.

மேலும், சிவனடியார் சுந்தரர் பெருமான் பாடல் பாடிய தேவாரத் திரு தலங்களில்  இதுவும் ஒன்றாகும். இத்தனை சிறப்பு வாய்ந்த அவிநாசியப்பர் ஆலயத்தின் மேலும் சிறப்பினை சேர்க்கும் விதமாக மற்றொரு புராண கதையும் உண்டு .

எமன் வாயில் சென்றவர்களை கூட எளிதாக மீட்டு தரும் அவிநாசியப்பர் ஆலயம்

ஒருமுறை அவிநாசியில் உள்ள அவிநாசியப்பர் ஆலயம் பகுதியில் வசித்த வந்த அந்தனரின் மகன் தனது நண்பர்களுடன் விளையாடிவிட்டு குளத்தில் நீராடச் சென்றான். அப்போது அந்தக் குளத்தில் இருந்த முதலை அச்சிறுவனை விழுங்கி விட்டது.

சுமார் ஒரு வருட காலம் பின் அந்த அந்தனர் வீட்டின் எதிர் வீட்டில் உள்ள மற்றொரு அந்தனர் வீட்டில் அவரது மகனுக்கு பூனல் போடும் விழா வெகு விமர்சியாக நடந்து கொண்டிருந்தது.

அவ்வழியே அவிநாசியப்பரை வழிபட வந்த சுந்தரர் பெருமான், விசேஷ வீட்டின் அருகில் அழுகுரல் கேட்டதை அவர் கவனித்தார். உடன் அவ்வீட்டிற்கு சென்று தங்கள் கவலைக்கான காரணம் என்ன என வினவினார்?”. அதற்கு அவர்கள் தங்கள் மகன் குளத்தில் குளிக்க சென்ற பொழுது முதலை விழுங்கியதையும் ., அவன் இறந்து இன்றுடன் ஒரு வருட காலம் ஆனது என்றும் கூறினர்.

மேலும் தங்கள் மகன் உயிரோடு இருந்திருந்தால் எங்கள் மகனுக்கும் பூணல் போடும் விழாவை தங்கள் இல்லத்தில் நடத்திற்போம் என்றும், ஆனால் தங்கள் விதி வாழ்க்கையவே துயரமாக்கிவிட்டது என்றும் அவர்களின் மனம் வேதனையினை சுந்தரர் பெருமானிடம் கூறினர்.

இந்த விஷயத்தை சுந்தரர் அறிந்த உடனே , “கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே” என்று மனமுருகி அவிநாசியப்பரிடம் பாடினார். அந்த பதிகத்தை அவர் முடிக்கும் தருவாயில், குளத்தில் இருந்து முதலை வெளிப்பட்டு  அந்தச் சிறுவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றதாக தல புராணம் சொல்கிறது. இவ்வாறு இறந்த பின் மீண்டும் சிவபெருமானால் உயிர்ப்பெற்று வாழ்ந்தவரகளில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஒருவர் ஆவார் .

இத்தல புராணத்தின் காரணங்களுக்காவே, இங்கு வரும் பக்தர்கள் தங்களது நீண்ட ஆயுளுக்காகவும், தீரா நோயிலிருந்து விடுபடவும், உடல் ஆரோக்கியம் சிறப்புறவும் வருகை தந்து அய்யன் அவிநாசியப்பரின் அருளை பெறுகின்றனர். 

அவிநாசியப்பர் கோயில், அதன் தொன்மையும், ஆன்மிக முக்கியத்துவமும் காரணமாகவே, பக்தர்களால் மேலும் பெருமைப்படுத்தப்படுகிறது.

https://astrologyinformation7.com/marriage-pariharam-temple-மஹாலட்சுமி-தவமிருந்த/

நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம் 

சந்திக்கின்றோம். தகவலை உடனுக்குடன் பெற  astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

To share with your friends please follow the links…

Rating: 4.5 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply