இந்து தர்ம சாஸ்திர ரீதியாக ஒருவர் மரணம் அடைந்த பின் வீட்டில் சுப காரியம் விலக்கும் காலம்

According to Hindu Dharma Shastra, after a person’s death, how long auspicious things are should removed from the house

இந்து தர்ம சாஸ்திர ரீதியாக ஒருவர் மரணம் அடைந்த பின் வீட்டில் சுப காரியம் விலக்கும் காலம்

பலரும் எங்களிடம் இறப்பு நடந்த வீட்டில் எத்தனை நாட்கள் தீட்டு அனுஷ்டிக்க வேண்டும் ?.

மேலும் பங்காளிகள் இறந்தால் தாங்கள்  என்ன செய்ய வேண்டும் ??

குறிப்பாக பெண்கள் தனது தாய் வீட்டில் உறவுகள் யாரேனும் இறந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்??

போன்ற நிறைய கேள்விகள் எங்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பி உள்ளீர்கள். உங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் தெளிவு கிடைக்கும் விதமாக இங்கே பதிவினை கொடுத்துள்ளோம். பதிவினை முழுமையாக படிக்கவும்.

முதலில் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் ஏன் 1 வருடத்திற்கு சுப காரியங்கள் செய்யக் கூடாது என தெரிந்து கொள்வோம். இறப்பு நடந்த வீட்டில் காரியம் முடிந்த பின்னர் யமதூதர்கள் இறந்தவர்களை யமலோகம்  அழைத்து செல்ல வருவார்கள்.

அவர்கள்  பூலோகத்தில் இருந்து யமலோகம் செல்லும் காலநேரம் ஆனது.. எமலோக கணக்கின் படி 1 நாள் என்பது ஆகும்.அதாவது எமலோகத்தில் ஒரு நாள் என்பது நமக்கு பூலோகத்தில் ஒரு வருட கணக்கு ஆகும்.

எனவே அவர்கள் அந்த 1வருட காலம் கடந்து செல்லும் பாதையானது மிகவும் வருத்தம் அழிக்கும் விதமாக கொடுமையான பாதையாக இறந்தவர்களுக்கு இருக்கும். 

அதற்கு காரணம் ..பூலோக வாழ்க்கையின் போது அவர்கள் வாழ்ந்த காலங்களின் கர்ம வினை முற்றின் காரணமாக பாதைகள் மிகவும் கடுமையானதாக அமைகின்றது.

எனவே நாம் வாழும் காலங்களில் வஞ்சகம்,பொறாமை கொண்டு அடுத்தவர் வாழ்க்கையினை கெடுதல் செய்வது, வறியவர்க்கு உணவு அளிக்காமல் பாவங்கள் சேர்ப்பது, பொய் சொல்வது போன்ற தவறினை இழைக்காமல்…

நல்ல எண்ணம் கொண்டு தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை தேடும் விதமாக மனித வாழ்க்கையின்  பயணத்தை மேற்கொண்டால் பாவிகளுக்கான பாதை  அல்லாது தேவலோக தூதர்களால் பூ போன்ற தேவப்பாதையில் நம்மை தேவலோகம் அழைத்து செல்வார்கள். நரகம் அல்லாது நமக்கும் சொர்க்கத்தில் இடம் தருவார்கள்.

எனவே., நாம் இந்து மத தர்ம சாஸ்திரப்படி இறந்தவர்களின் பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்ப அவர்களுக்கு அமையும் பாதைக்காக ..இறந்தவர்களின் குடும்பத்தில் அனைவரும் 1வருட காலத்தினை துக்கம் அனுஷ்டித்து சுப காரியங்களை விளக்கி வைக்க வேண்டும்.

மேலும் அவர்களுக்காக ஈசனிடத்தில் இறந்த ஜீவாத்மா சாந்தி நிலையினை அடைய மனமார வேண்டுதல் வேண்டும்.

குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் சுப காரியங்கள் செய்யக் கூடாத காலம்

1. தந்தை இறந்த பின்  குடும்பத்தில் 1 ஆண்டு எந்த சுப காரியமும் செய்யக் கூடாது. 1 ஆண்டு காலம் தீட்டு அனுஸ்டிக்கவும்.

2. தாய் இறந்த பின் குடும்பத்தில் 6 மாத காலம் எந்த நற்காரியங்களும் செய்யக் கூடாது.

3. சகோதரர், சகோதரி இறந்தால் குடும்பத்தில்  1 ஆண்டு கழித்தபின் சுபகாரியம் செய்ய வேண்டும்.

4. ஈன்ற மக்கள் இறந்தால் குடும்பத்தில் 1 ஆண்டு வரை எந்த சுப காரியமும் செய்ய கூடாது.

5.பங்காளிகள் இறந்தால் குடும்பத்தில் 16 நாட்கள் வரை எந்த சுப காரியம் செய்ய கூடாது.

6. திருமணம் ஆன பெண்கள் கவனிக்க வேண்டியவை:

திருமணத்திற்கு பின்பு தனது தாய் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் அப்பெண்ணுக்கு புகுந்த வீட்டில்  3அல்லது 16 நாட்கள் வரை தீட்டு ஆகும்.

தீட்டினை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் மற்றும்

மரணம் அடைந்த பின் இறப்பு விதிகள் பின்பற்ற வேண்டியவை:-

இறப்பு நடந்த வீட்டில் மேற்கூறியவாறு உங்களின் உறவு முறைக்கு ஏற்ப குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதங்களுக்கு  தீட்டினை அனுஷ்டிக்க வேண்டும். அவை என்னவென்று ஒவ்வொன்றாக பாப்போம்.

  • தலைக்கு என்னை தேய்த்து குளித்தல் கூடாது.
  • பொட்டு வைத்தல், பூ வைத்தல், மஞ்சள் பூசுதல் ஆகாது.
  • 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு தலைக்கு நல்லெண்ணெய், சீயக்காய் வைத்து குளிக்க வேண்டும்.
  • மேலும் காரியம் முடியும் வரை வீட்டில் பூஜைகளை விளக்கவும். பங்காளிகள் இறந்தாலும் கடைபிடிக்க வேண்டும்.
  • மலை கோவில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • கோவிலுக்கு செல்லலாமா? கூடாதா ?

   நம் மன நிம்மதிக்காக மனக்குறையினை இறைவனிடத்தில் சமர்ப்பிக்க கோவிலுக்கு 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு அனைவரும் செல்லலாம்.

ஆனால் இறந்தவர்கள் (தாய், தந்தை, உடன்பிறந்தோர் பெற்ற பிள்ளை) குடும்ப உறுப்பினராக யாரேனும் இறந்தால் தீபம் ஏற்றுவது, பொங்கல் வைத்து வழிபாடு செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது, தேங்காய் பழம் மாற்றுவது, அர்ச்சனை செய்வது போன்றவற்றை ஒரு வருட காலத்திற்கு தவிர்க்க வேண்டும்.

  • கோவில் பண்டிகைகளுக்கு 1 வருட காலத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • புத்தாடைகள் எடுப்பதை 1 வருட காலம் தவிர்க்கவும்.
  • தீபாவளி, பொங்கல், சித்திரை திருநாள் போன்ற பண்டிகை கொண்டாட்டங்களை 1 வருட காலத்திற்கு தவிர்க்கவும்.
  • அம்மாவாசை வழிபாடு செய்யலாம் காக்கைக்கு இலை போட்டு அன்னதானம் செய்யலாம்.
  • இறந்தவர்கள் பங்காளிகள் ஆயின் 16ம் நாள் காரியம் முடிந்த பிறகு வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடலாம் . ஆலயம் போகலாம் . தீபம் ஏற்றலாம், அர்ச்சனை செய்யலாம். மேலும் வழக்கம் போல் உங்கள் அன்றாட வாழ்க்கையினை வாழலாம். உங்களுக்கு தீட்டு 16நாள் மட்டுமே.
  • காரியம் முடியும் வரை அசைவம் சாப்பிடுவதை அனைவரும் தவிர்க்கவும்.
  • காரியம் முடிந்த பிறகு வீட்டினை அய்யர் வைத்து புண்ணியதானம் செய்ய வேண்டும். மேலும் கோமியம் தெளித்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஒருவேளை 1 வருட காலத்திற்கு முன்பாகவே சுப நிகழ்வுகள் நடத்த நிர்பந்தம் ஏற்பட்டால் விநாயகர் வழிபாட்டினை செய்து,குலதெய்வம் வழிபாட்டினையும் செய்த பின்னர் துவங்கவும்.
  • அதே போல்… நம் வீட்டின் எதிர் வீடோ அல்லது நமக்கு அருகாமையில் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் இறந்தால் அன்றைய நாளில் நம் வீட்டின் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்துவதை தவிர்க்கவும்.
  •  அன்றைய நாளில் பூஜை அறையின் கதவினை அடைத்து வைக்கவும் அல்லது திரை கொண்டு மூடவும்.

அவசியம் பூஜை செய்ய நேரிட்டால் மணி அடித்து பூஜை செய்வதை தவிர்க்கவும்.

  • அதே போல் திருமணம் நடந்து 6 மாதங்கள் வரை அந்த குடும்பத்தில் உபநயணம், கர்ண பூஷணம்(காது குத்துவது), புதமனை புகுதல், தீர்க்க யாத்திரை செய்தல் கூடாது.

இங்கனம் மனித பிறவியானது பாவம், புண்ணியம் கணக்கிற்கு ஏற்ப நமது ஜீவ ஆத்மாவின் முக்தி நிலையில்  ஒவ்வரு வருக்கும் மாறுபாடு ஏற்படுகின்றன.அவை நாம் வாழும் காலங்களில் ஆற்றும் கர்ம வினையினை பொறுத்து இறைவனால் விதிக்கப்பட்ட தர்மசாஸ்திரப்படி அனைவருக்கும் மாறுபாடுகள் அமைகின்றன.

எனவே பிறவியில் பெரும் பிறவியான மனித பிறவியில் பாவங்களை தொலைத்து…புண்ணியங்களை சேர்த்தால் நிச்சயம் நமக்கு இறைவனின் திருவடிகளில் சரணம் அடைந்து முக்தி கிட்டும் . இறைவனின் பரிபூர்ண அருளினை பெறலாம்.

அதேபோல் இறைவனின் ஆசிகிடைத்தால் மட்டும் ஒருவனின் வாழ்வு சிறப்பு அடையாது. நமது முன்னோர்களின் ஆசியும் கண்டிப்பாக நாம் பெறவேண்டும்.

அதற்கு நம் குடும்பத்தில் நம்மோடு இருந்தவர்கள் ஒரு நாள் இல்லை என்றபோது… குடும்பத்தில் உள்ளவர்கள் முறையாக அவர்களுக்கான ஈமச்சடங்கினை முழுமையாக செய்து அவர்களின் புண்ணிய ஆத்மா இறைவனிடத்தில் முக்தி பெற நம்மால் முடிந்த சாஸ்திரங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். நமது கடமையும் கூட.

சில பிள்ளைகள்., பெற்றவர்களை அவர்கள் வாழும் காலங்களில் பாரமாக நினைத்து பிரிந்து வாழ்வது மட்டும் அல்லாமல்.. அவர்களின் இறப்புக்கு செய்யவேண்டிய ஈமக்காரியங்களையும் செலவாக எண்ணி அதை செய்ய மறுக்கின்றனர். இது மிக பெரிய பாவச் செயல் ஆகும். பெற்ற பிள்ளைகள் அதை செய்ய மறுத்தாலோ.. துக்க அனுஷ்டிக்க வேண்டிய 1 வருட காலங்களில் புத்தாடை அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபாட்டாலோ..

 நமது முன்னோர்களின் மனம் வேதனைக்கு உள்ளாகி நம் இல்லம் தேடி வரும்போது அவர்கள் வேதனையில் கண்ணீர் விட்டு செல்வர். இதனால் இறைவன் அருளும் கிட்டாமல், முன்னோர்களின் அருளும் கிட்டாமல்.. நமது வாழ்க்கை வறுமை ஏற்பட்டு மற்றும் மன நிம்மதி இழந்து துன்பத்தினை அடைய நேரிடும்.

“ மூத்தோரின் வழிபாடு முன்னே.. நம்மை படைத்தவன் வழிபாடு அதன் பின்னே”.. என்ற பழமொழிக்கேற்ப நம் முன்னோரை வழிபாடு செய்து அவர்களின் ஆசி கிடைக்க பெறுவோம். குடும்பம் செழிக்கட்டும் …நம் குழந்தைகளுக்கும் அதை சொல்லித்தருவோம்..

இப்பதிவின் மூலம் உங்கள் சந்தேகத்தை போக்கும் விதமாக முன்னோர்களின் இறப்பு விதிகள் ,அவற்றை கடைபிடிக்க வேண்டிய காலங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகளை தெளிவு படுத்தியுள்ளோம் என நம்புகிறோம்.

…மீண்டும் சந்திப்போம்…

மேலும் இது போன்ற  தகவல்களுக்கு  Astrologyinformation7  Subscribe செய்து கொள்ளவும்.

சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யவும்

please rate us…

Rating: 5 out of 5.
Read more: இந்து தர்ம சாஸ்திர ரீதியாக ஒருவர் மரணம் அடைந்த பின் வீட்டில் சுப காரியம் விலக்கும் காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

predict your life before and succeed it by divine.

Leave a Reply