rama navami poojai

ராம நவமி அன்று வீட்டில் நாம் என்ன செய்ய வேண்டும்?.

ராம நவமி வழிபாடு முறைகள்

rama navami

மஹா விஷ்ணுவான ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி அவதரித்த  ராம நவமி ஆன நன்னாளில்- வீட்டில் ராமருக்கு எப்படி பூஜை செய்வது, ராம விரதம் இருப்பது , பூஜை செய்ய நேரம் இல்லாதவர்கள் எளிமையாக வழிபாடு செய்வது எப்படி ? போன்ற சந்தேகங்களுக்கு விடை தரும் விதமாக இப்பதிவின் மூலம் தர உள்ளோம். பதிவினை முழுமையாக படியுங்கள்.

https://astrologyinformation7.com/திருக்குறுக்கை-காம-விரு/

முதலில் ராம நவமி என்றால் என்ன என பாப்போம்.?

 தமிழ் மாதங்களில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய நவமி திதியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் வரக்கூடிய நன்னாளில் மஹாவிஷ்ணுவான ஸ்ரீ ராமர் பிறந்த நாளையே ராம நவமி என்றழைக்க படுகின்றது. ராமர்  பிறந்த ஊர் உத்தரபிரதேச அயோத்தி நகரம் ஆகும். தசரத சக்ரவர்த்தியின் மூத்த மகன் ஆவார்.

ramar birth image

மஹா விஷ்ணுவான ஸ்ரீ ஹரி , மானுட வாழ்க்கையினை முறைப்படி எப்படி வாழ்ந்து இன்ப துன்பங்களை கடந்து நேர்மையாகவும், மன உறுதியோடும் வாழ்வது எப்படி என நமக்கெல்லாம் எடுத்துக்காட்டவே மானுட ஜென்ம அவதாரமாக பிறந்ததே ராமாவதாரம் ஆகும்.

ராம நவமியில் கோவிலுக்கு சென்று எப்படி வழிபட வேண்டும் ?

ராம நவமி அன்று அனைத்து ராமர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் , ஆராதனை செய்யப்படும். கோவிலுக்கு செல்பவர்கள் முதலில் விநாயகருக்கு இரண்டு நெய்தீபமிட்டு, பின் ஸ்ரீ ராமபிரானுக்கும், அனுமாருக்கும் நெய்தீபம் போட்டு வணங்கி வாருங்கள். அன்றைய தினம் ராமரின் பட்டாபிஷேகம் வெகு விமர்சியாக செய்யப்படும்.

ramar pattabhishekam

உங்கள் ஊரின் அருகாமையில்   ராமர் கோவில் இருந்தால் கட்டாயம் சென்று தரிசித்து வாருங்கள். ராமர் பட்டாபிஷேகம் தரிசிக்கும் பக்தர்களுக்கு செய்த  பாவங்கள் அனைத்தும் தொலைந்து பல கோடி புண்ணியம் அவர்களின் வாழ்வில் சேரும் என்பது ஐதீகம் ஆகும்.

 கோவிலுக்கு செல்பவர்கள் முடிந்தால் அன்னதானம் இடுங்கள். பால்பாயாசம், சர்க்கரை பொங்கல், மோர் போன்ற பால் பொருட்களினால் செய்யப்படும் உணவினை தானம் செய்வது சிறந்த பலனை தரும். ராம நவமி அன்று ஆஞ்சநேயர் கோவில் செல்பவர்கள் செந்தூரம் வாங்கி சன்னதியில் தாருங்கள்.

anjaneyar

முடிந்தால் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதின மாலை, வெற்றிலை மாலை,  வடை மாலை போன்றவற்றை சாற்றுங்கள். இதனால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெரும். பிரிந்த கணவர் மனைவி ஒன்றுசேர்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு  நல்ல வரன் கிடைக்கும். விரைவில் திருமணம் கைகூடும்.

ராம நவமியில் வீட்டில் விரதம் இருப்பது எப்படி?

ராம நவமியில் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே விரதம் இருந்து ஸ்ரீ ராமரை வழிபடலாம். விரதமாக உபவாசம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து , வாசலுக்கு மாவிலை தோரணம் கட்டவும்.

பின் பூஜை அறையினை சுத்தம் செய்து நல்ல நேரத்தினில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் படத்திற்கு சந்தன காப்பு சாற்றி , பூக்கள், துளசி மாலைகள் கொண்டு விளக்கேற்றி பூஜை செய்யவும். வீட்டில் ஹனுமந்தர் படம் இருப்பின் அவற்றிற்கும் சந்தனம் , குங்குமம் வைத்து வெற்றிலை அல்லது வடை மாலை சாற்றவும்.

paal paayasam

நெய்வேத்தியம் ஆக ஸ்ரீ ராமருக்கு பால் பொருட்கள் அடங்கிய பால் பாயாசம் , சர்க்கரை பால்பொங்கல் , மோர் போன்று  அல்லது எளிமையாக வெள்ளம் கலந்த பசும்பாலினை கொண்டும்  நெய்வேத்தியம் செய்யவும்.

 விரதம் இருப்பவர்கள் கம்பராமாயணம் பாராயணம் செய்யவும். நேரம் இல்லாதவர்கள் கம்பராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தினை படிக்கவும். அல்லது ஸ்ரீ ராம ஜெயத்தினை  108  முறை கூறவும். மேலும் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற அன்றைய நாளில் “எனது நியாயமான எண்ணிய எண்ணம் வெற்றி பெற வேண்டும் அய்யனே “என மனதில் எண்ணி ஸ்ரீ ராம ஜெயத்தை எழுதி படத்திற்கு மாலையாக அவருக்கு சாற்றவும்.

வேலைக்கு செல்பவர்கள் மாதவிடாய் அடைந்த பெண்கள்  ராம நவமியினை  எப்படி வழிபடலாம்.?

sri ramar laxmanan

ராமநவமி அன்று விரதம் இருக்கவோ , கோவிலுக்கோ  செல்ல இயலாதவர்கள் மற்றும் மாதவிடாய் அடைந்த பெண்கள்  ஸ்ரீ ராம ஜெயம் அல்லது விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும் ராம நாமத்தினை உங்கள் அலுவலக பனி அல்லது வீட்டு வேலையினை  செய்து கொண்டே சொல்லலாம். நிச்சயம் ஸ்ரீராமரின் ஆசி உங்களுக்கும் கிட்டும்.

“ஸ்ரீராம் ராம் ராமேதி ரமே ராமே மனோரமே ।

ஸஹஸ்ரநாம் தத்துல்யம் ராமநாம் வராநநே ॥

பாடல் பொருள் விளக்கம்:-

“ராம ராம ராம” -ராம நாமம் என்று தியானிப்பதன் மூலம் , என் மனம் ராமனின் தெய்வீக உணர்வில் செல்கின்றது என்பது இந்த பாடலின் பொருள் ஆகும். இம்மந்திரத்தை மூன்று முறை கூறினாலே  உங்களுக்கு ராமநாமத்தை 1000 முறை நீங்கள் உங்கள் வாழ்வில் கூறியதற்கு ஒப்பாகும்.

sri ramar

உத்தரபிரதேச அய்யோதியில் உள்ள ராம ஜென்ம பூமியில் கட்டபட்டிருக்கும்  பால ராமரை தரிசிக்க முடியாதவர்கள் நமது தமிழ்நாட்டில் ,சேலம் மாவட்டம்  அயோத்தியபட்டினத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தென்னாட்டு அயோத்தி என கூறப்படும்  கோதண்டராமஸ்வாமி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்று ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தினையும்,ராமர் பாதுகையும் தரிசித்து வாருங்கள்.

இக்கோவில் இலங்கை வேந்தன் விபீஷணன் (ராவணேஸ்வரனின் இளவன்) கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஸ்ரீராமர் தனது வனவாசம் முடித்து தனது அரண்மனைக்கு திரும்புகையில் அவருக்கு விடை கொடுக்கும் விதமாக இங்கு ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமார் ஆகிய நால்வரும் குடும்ப சம்பேதராக விபீஷ்ணருக்கு தரிசனம் தந்ததாக கூறப்படுவது இக்கோவிலின் ஐதீகம் ஆகும்.எனவே உத்தரபிரதேசம் செல்ல முடியாதவர்கள் தென்னாட்டு அயோத்தியான இக்கோவிலுக்கு ஒருமுறையாவுது குடும்பத்தோடு சென்று வாருங்கள்.ஸ்ரீ ராமரின் அருள் பரிபூரணமாக உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் கிட்டட்டும்.

நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம் 

சந்திக்கின்றோம்.

தகவலை உடனுக்குடன் பெற  astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .

Also follow us on facebook to get notification on regular life updates.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 

நன்றி! வணக்கம்!

…மீண்டும் சந்திபோம்…

அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.

To share with your friends please follow the links…

Rating: 5 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Predict Your Life Before And Succeed It by God Divine

Leave a Reply