நீண்ட ஆயுளுக்கான தமிழ்நாட்டின் ஏழு சிவதலங்கள்
LORD SHIVA TEMPLES

LORD SHIVA TEMPLES-ஆயுள் கண்டம் உள்ளவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ வைப்பதற்கும் , மரணப்படுக்கையில் உள்ளவர்களை காப்பாற்ற உதவும் விதமாக புராணங்கள் சொல்லும் திருத்தலங்கள் நம் தாய் திருநாடான தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் உள்ளன.
அந்த ஏழு திருத்தலங்களை விரிவான விவரம் கொண்டு தனி தனி பதிவாக முந்தைய பதிவுகளில் கொடுத்துள்ளோம். அவற்றின் மொத்த தொகுப்பாக ஒருசேர அதனின் சுருக்கமான சாராம்சம் மற்றும் அதனின் லிங்க் இந்த பதிவில் கொடுக்க உள்ளோம். வேண்டியவர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆயுள் கண்டம் என்பது உங்களுக்கு ஜாதகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் முன்பே அறியலாம். இதனால் முன்எச்சரிக்கையோடு கவனமாக இருந்தால் விபத்தினை தவிர்க்கலாம். மேலும் உடல்நிலை பாதிப்பில் அக்கறை செலுத்தி கவனமாக இருக்கலாம்.

ஒருவர் விதி முடிவிற்கு வந்தாலும் அவற்றை மாற்றவும் , தள்ளிப்போடவும் சக்தி என்பது எம்பெருமான் தரிசனம் கண்டு ஆசி கிடைத்தாலே போதும். வாழ்ந்தாலும் நீண்ட ஆயுள் கிடைக்கும், இறந்தாலும் அவருக்கான மோட்சம் கிடைக்கும். அத்தகைய ஆயுள் குறைவில்லாமல் நீண்ட ஆயுளோடு வாழவைக்கும் ஏழு சிவ திருத்தலங்கள் எவை என பார்ப்போம் வாருங்கள்.
வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்றைய தலைப்பு “ ஆயுள் குறைவில்லாமல் நீண்ட ஆயுளோடு வாழவைக்கும் தமிழ்நாட்டின் ஏழு சிவதலங்கள் “
கோவில் –1
திருக்கடையூர் கால சம்கார மூர்த்தி வீரட்டேஸ்வரர் –THIRUKADAIYUR KAALA SAMHARA MOORTHI VIRATESHWARAR

LORD SHIVA TEMPLES-இந்தத் திருத்தலமும் மயிலாடுதுறைக்கு அருகில் தான் இருக்கிறது. தனது 16 வயது இளமை பருவத்தில் உயிர் பிரியும் என்று எழுதப்பட்ட தன் ஜாதகத்தில், எம தர்மனிடம் போராடி ஈசனின் அருளால் மரணத்தை வென்ற மார்கண்டேயனுக்கு நீடித்த ஆயுள் கிடைக்கப்பெற்ற ஊர் திருக்கடையூர். இங்கே எம்பெருமான் கால சம்கார வீரட்டேஸ்வரர் ஆக கோவில் கொண்டிருக்கிறார். இந்தத் திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் தான் இருக்கிறது.
இக்கோவில் புராணத்தை பற்றி மேலும் அறிய கீழே உள்ள லிங்கில் தனி பதிவாக கொடுத்துள்ளோம்.
கோவில்-2
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்திருக்கோவில்
Chennai mylapore kapaleeswarar temple

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலை பற்றி பார்க்க உள்ளோம். முன்னர் ஒரு காலம் சிவநேசன் என்பவர் தனது மகள் பூம்பவுடன் இங்கே வசித்து வந்தார். அப்பொழுது ஒருநாள் எதிர்பாராமல் சிவநேசன் மகளான பூம்பாவினை பாம்பு தீண்டியது. இதனால் தலைக்கு விஷமேறிய பூம்பா அங்கேயே இறந்து போனாள். அவளது சரம்பல், எலும்பு ஆகியவற்றை எடுத்து வைத்திருந்தார் சிவநேசன். ஒரு முறை திருஞானசம்பந்தர் கடலீஸ்வரர் ஆலயம் வந்த போது, தனது மகளின் நிலையை அவரிடம் சொன்னார், சிவநேசன். உடனே சாம்பலையும், எலும்பையும் ஆலயத்தில் வைத்து, திருப்பதிகம் பாடி பூம்பாவை மீண்டும் உயிர் பித்து தருமாறு கடலீஸ்வரரிடம் வேண்டினார். அவ்வண்ணமே அப்பெண்ணும் மீண்டும் உயிர் பெற்று தன் தந்தையிடம் சேர்க்கப்பட்டாள்.
இதை பற்றி மேலும் அறிய…
திங்களூர் சோமநாதர் ஆலயம் – THINGALUR SOMANAATHAR TEMPLE
கோவில்-3
LORD SHIVA TEMPLES-சந்திர பகவான் கையாலாயம் சென்ற பொழுது தனது அழகின் கருவத்தினால் விநாயகப்பெருமானை உருவ கேலி செய்தார். இதனால் கோபம் அடைந்த விநாயகப்பெருமானோ “அழகு தேய்ந்து உன்னில் இருக்கும் பதினாறு களையும் இழந்து பொலிவற்று போவாய் “என கடும் சாபம் சந்திரனுக்கு இழைத்தார். எனவே சாபம் போக்க சிவபெருமானை சந்திர பகவான் வழிபட்ட ஆலயம் இதுவாகும். இக்கதை பற்றி முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
இத்தல இறைவனுக்கு சோமநாதர், சந்திரசேகரர், சந்திரமவுலி உள்ளிட்ட பெயர்களும் உண்டு. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். மேலும் திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தைப் பாடினாலும் நிச்சயம் ஆயுளுக்கு பலன் உண்டு.
மேலும் இத்தல வரலாற்றில்,அப்பூதி அடிகளது வீட்டுத் தோட்டத்தில், அவரது மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை திருநாவுக்கரசர், திங்களூர் சோமநாதர் ஆலயத்தில் வைத்து பதிகம் பாடி உயிர்ப்பித்து அருளினார். இக்கதை பற்றி முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
MARRIAGE PARIHARAM TEMPLE-மஹாலட்சுமி தவமிருந்த சிறப்புவாய்ந்த திருமருகல் இரத்தினகிரீசுவரர் திருக்கோவில்
கோவில்-4

நம் தமிழ்நாட்டில் திருவாளப்புத்தூர் அருகே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருமருகல். இக்கோவில் விஷக்கடி போன்ற ஆயுள் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பாம்பு போன்ற விஷஜந்துகள் தீண்டாது என்பது ஐதீகம்.
மேலும் திருமணத்திற்கு வரன் தேடி திருமணம் கைகூட வில்லை என்றாலும் ஒரு முறை திருமருகல் மாணிக்கவண்ணர் திருக்கோவிலுக்கு சென்று வாருங்கள். இங்கு கோவில் மூலவராக மாணிக்கவண்ணர் (இரத்தினகிரீசுவரர்) ஆகவும்,அம்பிகையோ வண்டுவார் குழலி (ஆமோதளநாயகி) ஆகவும் பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர். நிச்சயம் நல்ல வரனாக திருமணம் கைகூடும்.

இங்கு இரவும் பகலும் ஈசனையே எண்ணி வாழ்ந்த ஒரு வணிகப் பெண் இருந்தாள். அவளது முறை மாப்பிள்ளை ஒரு முறை பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை இத்தல இறைவனை வேண்டி திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தரு ளினார். மேலும் அவர்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார். இத்தல ஆலயத்தில் ஆயுள் வேண்டியும், திருமணத் தடை விலகவும் வேண்டிக் கொள்ளலாம்.
மேலும் இக்கோவிலின் தல வரலாறு ,வறுமை போக்கும் மஹாலட்சுமி விரதம் பற்றிய புராண கதைகளும், மஹாலட்சுமி தீர்த்த குளம் போன்ற சிறப்பம்சம் பற்றி அறிய https://astrologyinformation7.com/marriage-pariharam-temple-மஹாலட்சுமி-தவமிருந்த/
AVINASHIYAPPAR TEMPLE-எமன் வாயில் சென்றவர்களை கூட எளிதாக மீட்டு தரும் அவிநாசியப்பர் ஆலயம்
கோவில்-5
அவிநாசியப்பர் கோவில், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ளது. இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, அவிநாசியப்பர் ஆலயமானது தமிழ்நாட்டின் பொக்கிஷமாகவும் புகழ்பெற்ற சிவாலயமாகவும் அனைவராலையும் கருதப்படுகின்றன.

இந்தப் பகுதியில் வசித்த ஒருவரின் மகன் குளத்தில் நீராடச் சென்றான். அப்போது அந்தக் குளத்தில் இருந்த முதலை அச்சிறுவனை விழுங்கி விட்டது. ஒரு முறை அவிநாசியப்பரை வழிபட வந்த சுந்தரர், இந்த விஷயத்தை அறிந்து, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே பாடினார்.
அந்த பதிகத்தை அவர் முடிக்கும் தருவாயில், குளத்தில் இருந்து முதலை வெளிப்பட்ட அந்தச் சிறுவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றதாக தல புராணம் சொல்கிறது இவ்வாறு இறந்த பின் மீண்டும் சிவபெருமானால் உயிர்ப்பெற்று வாழ்ந்தவரகளில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஒருவர் ஆவார். இக்கோவில் பற்றி மேலும் முழுமையாக அறிய…
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் – சமூக நீதியின் அடையாளம் மாமன்னன் மனுநீதி சோழன் வரலாற்று தொடர்பு
Thiruvarur Thiyagarajar Temple & Social Justice the Great King Manu Needhi Cholan Relatable History
கோவில்-6
அற்புதமும் , சிறப்பும் நிறைந்த சிவத்தளத்தினை கட்டாயம் சிவபக்தர்கள் அனைவரும் வாழ்வில் ஒருநாளாவுது தரிசிக்க வேண்டிய தேவார திருத்தலம் திருவாரூர் தியாகேஸ்வரர் (தியாகராஜர்) ஆலயம் ஆகும்.
ஒரு முறை கன்றை இழந்த தாய்ப்பசு ஒன்று, ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. நீதி எல்லா உயிர்களுக்கும் பொது என்பதை உணர்ந்த மனுநீதிச்சோழ மன்னன், தவறு செய்த தன் ஒரே மகனை தேர் சக்கரத்தில் இட்டு மரண தண்டனை கொடுக்க உத்தரவிட்டான்.

ஆனால் அந்தத் தண்ட னையை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை. அதனால் சோழ மன்னனே, தன்னுடைய தேரின் காலில் மகனை படுக்கவைத்து அவனை கொன்றான். அப்போது தந்தை, தாய், சேய் என மூவுரு கொண்ட தியாகேசன், அங்கு திருக்காட்சி கொடுத்து இளவரசன், கன்று இருவரையும் உயிர்ப்பித்து அருளினார். இந்த தியாகேசர் அருளும் ஆலயம் திருவாரூர் தியாகேசர் திருக்கோவிலாகும்.
இக்கோவில் மற்றும் மன்னன் மனுநீதி சோழன் பற்றிய சுவாரசியமான அறிய தகவல்களுக்கு …
திருக்குறுக்கை காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம்
Thirukurukkai Kaama Thakana Veerateshwarar Temple
கோவில்-7
எம்பெருமான் ஈசன் யோக தட்சிணா மூர்த்தியின் சுவரூபமாக இருந்தபொழுது, அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், மன்மதன் எரிந்து சாம்பலாகி இறந்தார். இறந்த சாம்பல் விழுந்த இடம் திருக்குறுக்கை. இங்கு காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறந்த கணவனை மீண்டும் உயிர் கொடுத்தருளுமாறு , மன்மதனின் மனைவி ரதி திருக்குறுக்கையில் வீற்றிருக்கும் இறைவனைப் பூஜித்து வேண்டினாள் . அதன்படியே மன்மதனை, ரதியின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் வகையில் ஈசன் உயிர்ப்பித்து அருளினார். இந்தத் திருத்தலம் தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. இப்புராண கதையின் முழு விளக்கம் மற்றும் இக்கோவில் பற்றி மேலும் பதிவில் அடுத்த பதிவில் கொடுக்க உள்ளோம் காத்திருங்கள்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் பதிவிற்கு ரேட்டிங் தரும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். please do like our page and rating us to encourage our work.
நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம்
சந்திக்கின்றோம்.
தகவலை உடனுக்குடன் பெற astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .
Also follow us on facebook to get notification on regular life updates.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
To share with your friends please follow the links…
Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply