திருக்குறுக்கை காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம்
Thirukurukkai Kaama Thakana Veerateshwarar Temple
கோவில்-7

Thirukurukai Veerateshwarar Temple
தவறான காம எண்ணங்கள் மனதில் ஒருவருக்கு எழுந்தாள் அவர் வாழ்க்கையில் அறநெறி தவறி தவறான வழிக்கு செல்ல நேரிடலாம்.விடலை பிள்ளைகளும் அலைபேசி போன்ற தொழில்நுட்பங்களில் உள்ள செயலி கொண்டு தவறான வழியில் செல்லாமல் இருக்க மனக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம்.
அதற்கு பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரின் நேரம் ஒத்துழைப்பு இருப்பது மிகவும் அவசியமான காலம் இது. அதை மறந்து பணத்தை நோக்கி நாம் பயணிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.. இதற்கு தீர்வாக ஆன்மிகத்தில் என்ன வழி உள்ளது என்பதை இனி பார்ப்போம்.

எம்பெருமான் ஈசன் யோக தட்சிணா மூர்த்தியின் சுவரூபமாக இருந்தபொழுது, அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், மன்மதன் எரிந்து சாம்பலாகி இறந்தார். இறந்த சாம்பல் விழுந்த இடம் திருக்குறுக்கை. இங்கு காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
இக்கோவில் அட்டவீரட்டதளங்களில் ஒன்றாகும். இக்கோவிலின் தல வரலாறு, சிவனின் யோக தட்சிணாமூர்த்தியின் ஸ்வரூபம் மற்றும் மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற புராண கதைகளும் இப்பதிவின் மூலம் காண உள்ளோம். வாருங்கள் தலைப்பிற்கு செல்வோம். வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைய தலைப்பு “திருக்குறுக்கை- காம விருப்பத்தின் மேல் விழுந்த வீரகோபம்”
வீரட்டேஸ்வரர் என்றால் என்ன? VEERATESHWARAR DETAIL

வீரட்டேஸ்வரர் என்றால் ஈசனின் வீரத்தையும் , அவரது கோபத்தையும் குறிப்பிடும் அவதார புருஷோத்தமராக காட்சி அளிப்பவர் ஆகும். எம்பெருமான் ஈசன் கோபம் கொண்டு , அசுரர்களை மற்றும் தன்னுடைய பகைவர்களை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டி , நம்மை எல்லாம் காக்கும் பொருட்டு ஆதிசக்தியாக உருப்பெற்ற தளங்களே அட்டவீரட்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றது.
விளக்கி சொல்ல வேண்டும் என்றால் அட்டவீரட்டேஸ்வரர் என்பது எம்பெருமான் ஈசனின் எட்டு (8) சிறப்பு ஸ்தலங்களைக் குறிக்கும். இதில் ஒவ்வொரு தலமும் சிவனது வீரத்தையும், அருளையும் பிரதிபலிக்கின்றன.
இத்தலங்களின் சிறப்பே தர்மநெறி கொண்டு வாழ்ந்தால் வெற்றிக்கென தனி முகம் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஆகும்.

இத்தலங்களுக்கு மற்றொரு பெயராக சிவபெருமான் தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்தியதால் இந்தத் தலங்களை “வீரட்ட தலங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றது.
இத்தலங்கள் எவை மற்றும் அதன் பலன்களை பற்றி அடுத்த பதிவினில் விரிவாக பார்ப்போம்.
திருக்குறுக்கை காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம்
Thirukurukai Kamadhagana Veeratteswarar Temple
“காமதகன வீரட்டானேஸ்வரர்” ஆலயம் என்பது, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. சோழர்களால், நாயக்கர்களால் போற்றப்பட்டு புனரமைக்கப்பட்ட ஸ்தளம் ஆகும். சிவ தலங்களில் எட்டு வீரட்டானங்களுள் இதுவும் ஒன்றாகும்.

இந்தக் கோவிலில் எம்பெருமான் ஈஸ்வரன் காமதேவனை அழித்த வீரட்டானேஸ்வரர் ரூபம் கொண்டு கோபமாகப் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
இக்கோவில் அமைந்திருக்கும் இடம் நம் தமிழ்நாட்டில் திருகுறுக்கை, மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் மூலவராக ஈசன் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் ரூபமாகவும், தாயாராக ஸ்ரீ இலங்கயற்கண்ணி அம்பாளாகவும்
பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர். இக்கோவிலுக்கு மேலும் சிறப்பை சேர்க்கும் விதமாக திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடிய பாடல் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும் .
காம தகன வீரட்டேஸ்வரர் புராண வரலாறு– Thirukurukai Veerateshwarar Temple
தனது கடும் தவத்தினால் ஈசனிடம் பெற்ற வரங்களை கொண்டு நாளுக்கு நாள் சூரபத்மனின் அதர்ம செயல் பெருகிகொண்டே போன காலம் அது. அவன் ஈசனிடம் வாங்கிய வரத்தால் தேவர்களுக்கும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். இதனால் முருகப் பெருமான் கார்த்திகேயனின் அவதாரம் நோக்கி அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.

சூரனை அழிக்கும் நேரம் கனிந்தும் எம்பெருமான் ஈசன் விருட்சத்தின் அடியில் அமர்ந்து நித்ய யோக நிலையிலேயே தவம் புரிந்து கொண்டிருந்தார். ஈசனின் தவத்தை களைக்க நாரத மஹரிஷி தேவர்களுக்கு ஒரு வழியினை கூறினார்.
தேவர்கள் திருமணம் விரைவாக நடக்க வேண்டி, காமதேவனான மன்மதனை ஈசனின் தவத்தை கலைக்க அனுப்பினர். காமதேவனோ முதலில் மறுக்க, பின் உலக நன்மைக்காக தேவர்களிடத்தில் ஒப்புக்கொண்டார்.

அதற்காக மன்மதன் கங்னபுத்தூர் என்ற இடத்தில் கங்கணம் காட்டினார் என்றும், ஈசனின் தவத்தை கலைக்க்க தனது வில்லினை எடுத்த ஊர் வில்லியநல்லூர் என்றும்,வில்லில் நாண் ஏற்றிய ஊர் நாரணமங்களம் என்றும் இத்தல புராணவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பின் காமதேவன், தனது வில்லினால் சிவனிடம் காதல் பாணங்களை ஏவ, தவம் கலைந்த ஈசன் கடும் கோபத்தில், தனது மூன்றாவது கண்ணான நெற்றி கண்ணை திறந்து அக்னியில் காமனை சாம்பலாக்கினார். மன்மதன் ஈசனால் காமதகனம் செய்யப்பட்டு சாம்பலான இடமே விபூதி குட்டை ஆகும். இவ்விடம் இக்கோவில் அருகே இருக்கும் புர்களுக்கு நடுவே இன்றும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் கண்டதை போக்கும் காம தகன வீரட்டேஸ்வரர்
LONG LIFE AGE BLESSING THIRUKURUKAI VEERATESHWARAR TEMPLE
கோவில்-8
இறந்த கணவனை மீண்டும் உயிர் கொடுத்தருளுமாறு , மன்மதனின் மனைவி ரதி திருக்குறுக்கையில் வீற்றிருக்கும் இறைவனைப் பூஜித்து வேண்டினாள் . அதன்படியே மன்மதனை, ரதியின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் வகையில் ஈசன் உயிர்ப்பித்து அருளினார்.

இருப்பினும் மன்மதனோ உருவமில்லாத நிலையில் இருந்தாலும், பரிசுத்த சக்தியாக வாழ்வான் என எம்பெருமான் ஈசன் அவருக்கு ஆசி வழங்கினார்.
இந்த லீலைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் திருகுறுக்கைத் தலத்தில் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இங்கு உள்ள சிவன் “காமதகன வீரட்டானேஸ்வரர்” என பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அதாவுது “காமனை அழித்த வீரர்” என்பது பொருள் ஆகும்.
காம இச்சையில் இருந்து மீள வழிகாட்டும் தலம்
காமதேவனை அழித்த இடமாக விளங்கும் இத்தலம், மன விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி கொண்டதாக நம்பப்படுகின்றது.

ஈசனிற்கு காம எண்ணங்களை வரவைக்க காமதேவன் பாணம் எய்தியதால் காமதேவனை அழித்த இடமாக விளங்கும் இத்தலம் –மதியின்மை, தவறான ஆசைகள், மனக்கிளர்ச்சி ஆகியவற்றில் இருந்து மீள நமக்கும் வழிகாட்டும் தலமாக இது அமைகின்றது.
https://astrologyinformation7.com/கோவிலுக்குள்-செய்ய-கூடாத/
விடலை பருவத்தில் இருக்கும் நம் பிள்ளைகளை இக்கோவிலுக்கு நாம் அழைத்து வருவதால் அவர்கள் தவறான வழிக்கு செல்லாமல் நல்ல புத்தி மற்றும் செயல் கொண்டு விளங்குவார்கள் என்பது இக்கோவிலின் நம்பிக்கை ஆகும்.
மேலும் மனம் திருந்தி தர்மத்தின் வழியில் வந்து தன்னை வணங்குபவர்களுக்கு மன விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி கொண்டதாக ஈசன் இங்கு அருள்பாலிக்கின்றார். நம் பகைவர்களிடமிருந்தும் நம்மை காக்கின்றார்.

இத்தனை பெருமையும், சிறப்பும் நிறைந்த காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு நாம் அனைவரும் சென்று தரிசித்து ஈசனின் ஆசி பெற வேண்டும் .எனவே , வீரட்டேஸ்வரர் என்று அழைக்கப்படும் வெற்றிக்கே தனி முகம் கொடுத்த சிவனின் ரூபத்தை நாம் அனைவரும் தரிசித்து நம் வாழ்க்கையிலும் எடுத்த காரியத்தை வெற்றி அடைய செய்வோம் என்பதே இப்பதிவின் வேண்டுகோள் ஆகும்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் பதிவிற்கு ரேட்டிங் தரும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். please do like our page and rating us to encourage our work.
நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம்
சந்திக்கின்றோம்.
தகவலை உடனுக்குடன் பெற astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .
Also follow us on facebook to get notification on regular life updates.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
To share with your friends please follow the links…
Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply