உங்கள் பிள்ளைகள் பள்ளி, கல்லூரி தேர்வில் முதலிடம் பெற பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க.. அனைத்து பெற்றோர்களும் கட்டாயம் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய குறிப்புகள். பதிவினை தவறாமல் முழுமையாக படிக்கவும்.

பெற்றோர்கள் மனதில்,” தங்களின் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை ,நாம் எப்படியாவுது அவர்களுக்கு படிப்பை கொடுத்துவிட வேண்டும் “என்று அரும்பாடு பட்டு தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். காரணம் , படிக்காததால் கிடைத்த வேலையினை செய்து , அவர்கள் படும் துயரம் தனது மகனுக்கோ, மகளுக்கோ வந்து விடக்கூடாது என்பது அவர்களின் பெரும் கனவாகும்.
அது உண்மையே ,ஏனெனில் ஒரு தலைமுறை படித்து முதல் பட்டதாரி ஆகிவிட்டால் , அவர்களை தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறையினர் அடுத்த அடுத்த கட்டத்திற்கு சென்று வாழ்க்கையில் சிறந்த பண்புகளோடு மேன்மை அடைய தொடங்குவார்கள் .

இப்பொழுது அந்த கால கட்டம் போன்று படிப்பு நோக்கி நாம் செல்வது என்பது மிக கடினமானது அல்ல. நமது ஊருக்கும் , நாம் வசிக்கும் இடங்களின் அருகாமையிலேயே அரசாங்க பள்ளிக்கூடமோ, தனியார் பள்ளிக்கூடமோ நிச்சயம் கட்டப்பட்டு இருக்கும்.
எனவே, அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமாகி விட்டது. இங்கே பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது என்பது யாதெனின் , பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கோ, கலோரிகளுக்கோ சேர்ப்பது மட்டுமே தனது பொறுப்பு என்று உணர்வதே ஆகும். இது முற்றிலும் பெற்றோர்களின் தவறான எண்ணம் ஆகும்.
உங்கள் பிள்ளைகள் பள்ளி பருவத்தின் ஆரம்ப கட்டத்திலேயே முதலிடம் பிடிக்க வைப்பது உங்கள் கைகளிலேயே தான் உள்ளது. “நான் படிக்காதவன், என் மனைவியும் படிக்காதவள் . அப்படி இருக்க நாங்கள் எப்படி படிப்பு சொல்லித்தர முடியும்?!.. அது ஆசிரியர்களின் கடமை தானே” என்று பல பெற்றோர்கள் நினைக்கின்றனர்.

இங்கே நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய காலகட்டத்தில் , அப்பொழுது மாணவர்கள் ஆசிரியர்கள் கையில் இருந்தார்கள். ஆசிரியர்களுக்கென தனி மதிப்பும், மரியாதையும், பயமும் மாணவர்களிடத்தில் இருந்தன. இன்றைய காலகட்டமானது முன்பு போன்று கிடையாது. ஆசிரியர்கள் ஆன அவர்கள் பாடம் மட்டுமே நடத்துவர். தேர்வு எழுதுவது எப்படி?, எப்படி படிப்பது?, எழுதுவது ? போன்ற பயிற்சிகள் மட்டுமே பள்ளிக்கூடங்களில் தரப்படுகின்றன.
இதனை புரிந்து கொண்டு மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் ஊக்கத்துடன் படிக்க வைக்க வேண்டும்..
சரி பெற்றோர்களின் பொறுப்பிற்கான காரணத்தை பார்த்தோம். உங்கள் பிள்ளைகளின் படிப்பு கெடுவதற்கு நீங்களே காரணம் என்பதை நீங்கள் அறிவீர்களா ? இதை எவ்வாறு கண்டறிந்து உங்கள் குழந்தைகளின் படிப்பை மேம்படுத்துவது என இனி பார்ப்போம்.
உங்கள் பிள்ளைகள் கல்வியில் நன்றாக சிறந்து விளங்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய நச்சுனு ஐந்து குறிப்புகள்.

முதலாவதாக ,பிள்ளைகளை வீட்டில் படிக்க சொல்லி திட்டும் பெற்றோர்கள், முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பார்ப்பதை மாலை நேரத்தில் நிறுத்தவும். அவர்கள் படிக்கும் பொழுது நாடகம் பார்ப்பது, படங்கள் பார்ப்பது, பாட்டு கேட்டு மகிழ்வது போன்ற செயல்களால் அவர்களின் கவனம் கண்டிப்பாக சிதறும். நீங்கள் அவர்கள் படிப்பதற்காக தனி அறை ஒதுக்கினாலும், டிவி சத்தத்தினை குறைத்து உங்கள் விருப்பமான நெடுந்தொடரை பார்ப்பதாலும் பலன் இல்லை.
இதனால் பிள்ளைகளின் மனம் வெளியில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், தான் மட்டும் கஷ்டப்பட்டு படிப்பதாகவும் எனும் எண்ணம் அவர்களிடத்தில் எழும். இதனால் படிப்பில் ஆர்வம் குறைந்து பொழுதுபோக்கினை தான் அவர்கள் விரும்புவார்கள். எனவே உங்கள் பிள்ளைகள் படிக்கும் நேரங்களில் உங்களுக்கான பொழுதுபோக்கினை தவிருங்கள்.

2 ) பிள்ளைகள் படிக்கும் பொழுது ,செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டு செல்போனில் வாட்ஸாப்ப் உரையாடல் பண்ணுவது, யூடூப்பில்,இன்ஸ்டா வில் வீடியோ பார்ப்பது போன்று நீங்கள் பயன்படுத்தினால், அவர்களின் கவனம் மற்றும் ஆர்வம் உங்கள் செல்போன் மீதே இருக்குமே தவிர படிப்பில் இல்லை. ஏனெனின் அதன் தாக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது. எனவே, உங்கள் பிள்ளைகள் படிக்கும் பொழுது செல்போன் பயன்படுத்தாதீர்கள்.
https://astrologyinformation7.com/manachanallur-arulmigu-uthamar-kovil-details-இந்தியாவிலேயே-வேறு/
3)மூன்றாவுது கிரிக்கெட் பார்ப்பது. படிக்கும் பிள்ளைகளுக்கு கிரிக்கெட் பார்க்க வைப்பது தவறு இல்லை. ஆனால் அதன் மோகம் பிள்ளைகளுக்கு அதிகமாகி விடாமல் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்த்து கொள்ளவேண்டும்.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் வெறும் விளையாட்டு மட்டும் இல்லை .அதுவும் ரசிகர்களை வைத்து பணம் சம்பாரிக்கும் ஒரு அமைப்பே ஆகும். இது போன்ற விளையாட்டுகள் பிள்ளைகளின் தேர்வு அட்டையின் வெளியீட்டை வைத்து நடத்தப்படுவது அல்ல.

இதனை நாம் அனைவரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி இறுதி தேர்வு நெருங்கும் நேரத்திலேயே அவர்கள் எப்பொழுதும் IPL போன்ற மேட்சினை நடத்தி நமது பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுவார்கள்.
மேட்சில் வெற்றி பெற்றால் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதும், தோல்வி அடைந்தால் மனஉளைச்சலுக்கு ஆளாவதும் போன்ற மனநிலைக்கு நம் பிள்ளைகள் தள்ளப்படுவதால் அவர்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளில் நடக்க இருக்கும் தேர்வினையே மறக்க விட செய்யும்.
இதனால் தேர்விற்கு முழுமையாக படிக்காமல் ,மறுநாள் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வினாத்தாள் வாங்கும் நேரத்தில் மனஅழுத்தம் அதிகரிக்க செய்கின்றன. எனவே படிக்கும் பிள்ளைகளுக்கு கிரிக்கெட் என்பது தேர்வு நேரங்களில் கவனசிதறலை கட்டாயம் ஏற்படுத்தும் என்பது பெற்றோர்கள் , பிள்ளைகள் இருவரும் கண்டிப்பாக உணர வேண்டும்.
4.)நான்காவுதாக, உங்கள் வீட்டிற்கு உங்களை சந்திக்க யாராவுது வந்தால் , அவர்களிடம் உரையாடுவதை உங்கள் பிள்ளைகளின் செவிகளில் விளாமல் பேச வேண்டும்.

மேலும் உங்கள் உறவினர்களிடம் செல்போனில் உரையாடுவது, பக்கத்து வீட்டாருடன் கதை பேசுவது, உங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கும் விசேஷங்கள் அல்லது அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை பேசிக்கொள்வது போன்ற தேவையற்ற உரையாடல்கள் பிள்ளகைள் படிப்பை கெடுக்கலாம்.
நீங்கள் பேசுவதை நோக்கி அவர்களின் மன எண்ணோட்டம் நகர கூடும். குறிப்பாக அம்மாக்களுக்கு. தேர்வு நேரங்களில் , படிக்கும் நேரங்களில் ஷாப்பிங் போன்ற பொழுதுபோக்கினை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

5) ஐந்தாவுதாக பிள்ளைகள் படிப்பதற்கென தனி இடத்தினை உங்கள் வீட்டில் நீங்கள் அமைத்து தர வேண்டும். அது தனி அறையாக இருப்பது நிறைய பெற்றோர்கள் சரி என நினைக்கிறார்கள். அதுவும் தவறே . தனி அறையினை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்து, கணினி,அலைபேசி , மியூசிக் சிஸ்டம் போன்றவையும் உடன் நீங்கள் அவர்களுக்கு அந்த அறையில் அமைக்கும் பொழுது நிச்சயம் அவர்கள் படிக்க மாட்டார்கள். உங்களை ஏமாற்றுவார்கள்.
இதற்கு நீங்கள் அவர்களை அவ்வப்பொழுது கண்காணிக்க வேண்டும். உண்மையிலேயே கணினி, செல்போனில் பாடம் தான் படிக்கிறார்களா என்று கண்காணியுங்கள். அவர்கள் பயன்படுத்தும் அறையின் கதவினை எப்பொழுதும் திறந்தே வைக்கும் படி அறிவுறுத்துங்கள். இல்லையேல் உங்கள் வீட்டின் ஹாலிலேயே ஒரு தனி இடம் அமைத்து கொடுங்கள்.

சரி இவற்றை செய்தால் என் பிள்ளைகள் நன்றாக படிப்பார்களா என்று கேட்டால், இது போதாது. இன்னும் ஒரு வேலை நீங்கள் செய்ய வேண்டும். இது தான் மிகவும் முக்கியமான குறிப்பாகும். உங்கள் பிள்ளைகள் படிக்கும் பொழுது நீங்களும் அவர்கள் உடன் அமர்ந்து அவர்கள் என்ன படிக்கிறார்கள், என்ன தேர்வு நாளை நடக்கிறது, அதற்கான பாடத்திட்டம் என்ன என அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு படிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களிடத்தில் தன்னிடம் ஒப்புவிக்குமாறு கேளுங்கள், அல்லது துணையாக அமர்ந்து உங்கள் வேலைகளை செய்யுங்கள். இதனால் அவர்களுக்கு படிக்கும்பொழுது தூக்கம், சோம்பல் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

இது போன்ற சின்ன சின்ன மாற்றங்களை உங்கள் வீட்டில் நீங்கள் செய்து பாருங்கள். பிள்ளைகளின் மனம் படிப்பை தாண்டி எங்கும் செல்லாது. புத்தியும் , மனமும் ஒரு சேர படிப்பிலேயே கவனம் இருக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் சின்ன தியாகங்கள் உங்களின் கஷ்டத்தினை அவர்களுக்கு உணர்த்தும். உங்களுக்காக அவர்களும் உண்மையாக படிப்பார்கள்.
இதனால் பிள்ளைகள் படிப்பிற்கும், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என கூறி இப்பதிவினை முடிக்கின்றோம். பதிவினை படித்த அத்தனை நல்ல பெற்றோர் உள்ளங்களுக்கும் நன்றி கூறி உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் பதிவிற்கு ரேட்டிங் தரும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். please do like our page and rating us to encourage our work.
நன்றி . மீண்டும் வேறுஒரு நல்ல தலைப்பில் வரும் வாரம்
சந்திக்கின்றோம்.
தகவலை உடனுக்குடன் பெற astrologyinformation7.com என்ற எங்கள் வலைத்தளத்தை subscribe செய்து கொள்ளவும். அல்லது astrologyinformation7 whatsapp channel யை தொடரவும் .
Also follow us on facebook to get notification on regular life updates.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தவறாமல் கமெண்ட் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி! வணக்கம்!
…மீண்டும் சந்திபோம்…
அன்புடனும், நலமுடனும் வாழ்வோம்.
To share with your friends please follow the links…
Predict Your Life Before And Succeed It by God Divine
Leave a Reply